Monday, June 20, 2005

தெரியாமத்தான் கேக்குறேன்-1

கண்ணையும் மனசையும் சுத்தமா வச்சுக்காத ஆம்பிளைங்களுக்கு மதுர மல்லியக்காவோட பதிவுல 'நல்லா விழுந்துக்கிட்டிருக்கு'. அந்தப்பக்கம் இதுவரைக்கும் போகாதவங்க ஒருதரம் எட்டிப்பார்த்துடுங்க. "இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே." அப்படின்னும் கேட்டிருக்காங்க. அது இருக்காங்க கொள்ளை பேரு!

நம்ம நல்லடியார் சொல்லியிருக்காரு, "போலி பெண்ணுரிமை பேசுபவர்கள் கவனிக்கவும்.இந்த வம்பே வேணாமுன்னுதான் இஸ்லாம் பர்தா அணியச் சொல்கிறது." அப்படின்னு.

நல்லா கவுனிங்க! இஸ்லாம் சொல்லுது, 'கெட்ட கெட்ட பசங்கள்லாம் இருக்காங்க, அதனால பொண்ணுங்களெல்லாம் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கினு போங்கோ'ன்னு. அதை புடிக்காதவங்க சொல்றாங்க, 'அந்தாளுங்க சொல்றதெல்லாம் கேட்காதே. அவங்க உன்னை அடிமைப்படுத்துறாங்க. உன்னை சுதந்திரமா விட மாட்டேங்குறாங்க. அதனால உனக்கு பிடிச்ச மாதிரி எப்படி வேணும்னாலும் நீ இருந்துக்கோ' அப்படின்னு.

நான் தெரியாமத்தான் கேக்குறேன்,
- இந்த மாதிரி 'பெண்ணுரிமை' பேசுறவங்க வீட்டு பொம்பள புள்ளங்க, vishytheking சொன்னமாதிரி NY கலாச்சாரத்தை பின்பற்றி டிரஸ் பண்ணனும்னு விரும்புனா, இவங்க இதே அறிவுரையை சொல்வாங்களா?
- இவங்களோட அறிவுரையை பின்பற்றுனா, மல்லியக்கா சலிச்சுக்குற மாதிரி 'சபலிஸ்டு'களுக்கு வசதி செஞ்சு கொடுத்த மாதிரி ஆயிடாதா?

நான் தெரியாமத்தான் கேக்குறேன். தெரிஞ்சவங்க யாராச்சும் பதில் சொல்லுங்க!

இப்படிக்கு
அப்பாவி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home