Monday, August 07, 2006

கோக்கு மாக்கு போட்டோ!


இந்த அக்காமாலா கம்பெனி இருக்குதே.. மன்னிக்கனும், கொக்கோகோலா கம்பெனி இருக்குதே, அவங்களுக்கு இந்தியால ஏற்கனவே இருக்குற பிரச்னை பத்தாதுன்னு, இன்னொரு பிரச்னைக்கு அடி போட்டிருக்காங்க..

பிரபல புகைப்படக்காரர் ஷரத் ஹக்ஸர் சென்னையில் வைத்த ஓரு புகைப்பட பேனர், அவங்களோட மதிப்பையும் மரியாதையையும் குலைக்குற மாதிரி இருக்குதாம். 'அதை உடனடியா அகற்றலேன்னா ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவோம்'னு ஷரத்தை மிரட்டியிருக்காங்க. 'உங்களால முடிஞ்சதை செஞ்சிக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம் ஷரத் ஹக்ஸர்.

ஹும்.. இவங்களுக்கு நேரம் சரியில்லை..!

4 Comments:

At 1:08 AM , Blogger ரவி said...

:)

 
At 1:09 AM , Blogger லிவிங் ஸ்மைல் said...

சரத் ஹக்சர்-ரின் போட்டோகிராபி மிக முக்கியமானது... குறிப்பாக அவருடைய போட்டோக்களில் உள்ள கிரியேட்டிவிட்டி ரசிக்கத் தகுந்ததாகும். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

என்னுடைய போட்டோகிராபி அறிவுக்கு எட்டியவரை சரத் ஹக்சர் இந்தியாவிற்கு முக்கியாமான போட்டொகிராபர் ஆவார்.

அவரிடம் இப்படி ஒரு பொது சிந்தனை இருப்பதைக் காண்கையில் அவர் மீதான என் மரியாதை மேலும் கூடுகிறது... அனைவருக்கும் தானே....

என் உளமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. ஹக்சருக்கும்....

 
At 1:22 AM , Blogger மனதின் ஓசை said...

//'உங்களால முடிஞ்சதை செஞ்சிக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம் ஷரத் ஹக்ஸர்.//

அது..


கூடவே நம்மளால முடிஞ்சத நாமலும் பன்னனும்..அதாங்க.. அத குடிக்கறத நிறுத்தினா போதும்.. அது நமக்குதான் நல்லது.. கூடவே நம்ம நாட்டுக்கும் :-)

 
At 6:46 AM , Anonymous Anonymous said...

//கூடவே நம்மளால முடிஞ்சத நாமலும் பன்னனும்..அதாங்க.. அத குடிக்கறத நிறுத்தினா போதும்.. அது நமக்குதான் நல்லது.. கூடவே நம்ம நாட்டுக்கும்//

நமக்கு நல்லதுன்னா மட்டும் சொல்லுங்க செய்துபுடுவோம்.

அப்ப நாட்டுக்கு...?.....!

அதெல்லாம் மேடைக்கு மட்டும் தானுங்கோ.

இறை நேசன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home