தெரியாமத்தான் கேக்குறேன் - 3
"புருஷனைப் பார்க்கிறதுக்கு முன்னால இருந்தே பூவும் பொட்டும் வெச்சிட்டுதானே இருந்திருக்கேன்... அப்படியிருக்கறப்போ, சும்மா இடையில வந்து பேருக்கு புருஷனா வாழ்ந்தவருக்காக நான் ஏன் பூவையும் பொட்டையும் இழக்கணும்னு தோணுச்சு! தாலி, புருஷன் வந்த பிறகு வந்துச்சு. அதை மட்டும் அத்து எறிஞ்சா போதும்னு உறுதியா இருந்துட்டேன். நான் எடுத்த சந்தோஷமான முடிவுல அதுவும் ஒண்ணு." அப்படின்னு நம்ம மனோரமா ஆச்சி சொல்லியிருக்காங்க. காஞ்சி பிலிம்ஸ் கூட தன் பதிவுல இதை பதிஞ்சிருக்கார்.
உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இஸ்லாம் இதத்தான் அப்பவே சொல்லியிருக்கு. இறந்து போன புருஷனுக்காக மனைவி தனது வழக்கமான அலங்காரங்களை துறந்துவிட்டு வெள்ளை உடை அணியத்தேவையில்லை. விதவை அபசகுனமானவளல்ல. ஒரு பெண் திருமணமானபிறகு கணவன் பெயரை தன் பெயருடன் இணைத்தும் தனது தனித்தன்மையை இழக்கவும் தேவையில்லை.
நான் தெரியாமத்தான் கேக்குறேன்,
- இஸ்லாம் என்றாலே 'பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது, அவர்களின் உரிமையை பறிக்கிறது' என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்களுக்கு இந்த விபரமெல்லாம் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறார்களா?
இப்படிக்கு
அப்பாவி