Saturday, July 30, 2005

எண்ணமோ போங்க!

அண்ணே ஆரோக்கியம், எப்பத்துலேருந்து கிரிஸ்டின் வேஷம் கட்ட ஆரம்பிச்சிங்க? இந்த வேஷம் உங்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தல தெரியுமா? பூனை வேஷம் போட்ட நரி மாதிரி இருக்குது. அட.. ஒரு உதாரணத்துக்கு சொன்னா என்னை ஏன் இப்படி கடிக்க வர்ரீங்க?

சரி.. சரி.. அதை விடுங்க. உங்களை பத்தி மத்தவங்க என்னெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுமா?

"மத்தவங்களோட மத நம்பிக்கையை விமரிசனம் செய்ய இந்தாளுக்கு என்ன அருகதை இருக்கு? தன்னை ஒரு கிருஸ்துவராக காட்டிக்கொள்ளும் இவன், உண்மையிலேயே கிருஸ்துவனாக இருந்தால், //இஸ்லாமில் சிறைப்பட்டு கிடக்கும் மனிதர்களை கிராமம் கிராமமாக பௌத்தத்துக்கும் கிரிஸ்துவத்துக்கும் அழைத்துக்கொள்ள வேண்டும்// என்று சொல்வானா?

முஸ்லிம்களின் நம்பிக்கை தவறு என்று சொல்லும் இவனால், அதற்கு பதிலாக தான் நம்பும் கொள்கை சிறந்தது என்று சொல்ல முடியாமல் போனது ஏன்?

இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஓலமிடும் இவன், அந்த குறைபாடுகள் தனது நம்பிக்கையில் எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குவானா?

இஸ்லாத்தைப்பற்றி தரக்குறைவாக விமரிசனம் செய்து, அதன் மூலம் முஸ்லிம்களை உசுப்பிவிட்டு அந்த கோபத்தை கிருஸ்துவத்தின் மீது திருப்பி இவ்விரு நம்பிக்கையாளர்களுக்கிடையில் சண்டை மூட்டி விட்டு அதில் குளிர் காய நினைக்கும் இவனின் குள்ள நரித்தனம் வெளிப்படாமல் போய்விடுமா என்ன?

தனது கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படையாக சொல்லி அதன் அருமை பெருமைகளைப் பற்றி பேச திராணியில்லாத இவனா இன்னொரு மார்க்க நம்பிக்கைகளை குறை கூறுவது?

இவன் முதலில் தனது பின்பக்கத்தை சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு மற்றவர்களின் பின்புறத்தை முகர்ந்து பார்க்க வரலாம்."

நாஞ்சொல்றதை சொல்லிட்டேன்.

எண்ணமோ போங்க!

இப்படிக்கு
அப்பாவி

Wednesday, July 27, 2005

சீக்கிரம் போங்கண்ணே!

ஆரோக்கியம் அண்ணே,

உங்களுக்கு காமெடியா கூட எழுத தெரியும்னு இவ்வளவு நாள் தெரியாம போய்டுச்சுங்களே!

சரி விஷயத்துக்கு வருவோம்.. இந்த செய்தியை பாத்தீங்களாண்ணே! பெரிய கட்டுரையா இருக்குறதால அதை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குதோ இல்லையோ தெரியலை.. நீங்களும் நெறய காமெடியெல்லாம் பண்ண வேண்டியிருக்கு.. அதனால முக்கியமான ஒரு பகுதியை மட்டும் உங்களுக்காக..

இன்னுமா இந்துவாக இருப்பது?

//எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்து தோற்றுவிட்ட கண்டதேவி தலித் மக்கள், இன்னும் கையிலெடுக்காத வலுவான ஆயுதம் மதமாற்றம் ஒன்றுதான். ஒரேயொருமுறை அதை அவர்கள் கையிலெடுக்கட்டுமே?! கள்ளர்களை ஆதரிக்கும் இதே அரசு, தலித் மக்கள் முன் மண்டியிடும். சாதி இந்துக்கள் கலவரமடைவார்கள். இந்து மதவாதிகள் நடுக்கமடைவார்கள். சர்வதேச பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்கூட ஓடோடி வரும். "ஒரே நாளில் சாதியை அழித்துவிட முடியாது'' என்று அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு, ஒரே நாளில் சாதியை அழித்துக் காட்டி வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் கண்டதேவி தலித் மக்கள்.//

சீக்கிரம் கண்டதேவி போங்கண்ணே! சாதி வேறுபாடு இல்லாத ஒரேமதம் இசுலாம்-தான்னு இவங்க பாட்டுக்கு இசுலாத்துக்கு மாறிடப்போறாங்க!

சீக்கிரம் போங்கண்ணே!

இப்படிக்கு
அப்பாவி

Tuesday, July 26, 2005

அண்ணா, எங்கேண்ணா போயிட்டீங்க?

அண்ணா, ஆரோக்கியம் அண்ணா, எங்கேண்ணா போயிட்டீங்க?

உத்திரபிரதேசத்தில உயர் ஜாதிக்காரங்க உபயோகிக்கிற குளத்தில மீன் புடிச்சதுக்காக ராம்பிரசாத்துங்கிறவர் முகத்தில ஆசிட் அடிச்சுட்டாங்களாம். உத்திரபிரதேசம்-கிறதால இது வேற எதோ தேசம் நினைச்சுடாதீங்கண்ணா, இதுவும் நம்ம நம்ம இந்தியா தான்ணா! தீண்டாமைய ஒழிக்க சட்டமெல்லாம் இருக்கே, அதே இந்தியாதான்ணா! சமூக நீதிக்காக குரல் கொடுக்குற உங்க பார்வையில இது படலையாங்கண்ணா? ஒடனே இதை கண்டிச்சு சூடா ஒரு அறிக்கை விட்டுடுங்கண்ணா. அப்படியே உங்க நண்பர் இனொமெனொ கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்கண்ணா. அப்படியே தலைவர் நேசகுமாரு கிட்டேயும்..

நீங்க எழுத முடியாட்டியும் பரவாயில்லை, உங்க பிழவாளுமை புலிப்பாண்டியையாவது அனுப்பி வையுங்கண்ணா. என்னது, ராம்பிரசாத்துக்கு புருடாபுராணத்துல சொல்லியிருக்குறபடி தண்டனை குடுத்துட்டு வந்ததே அவர்தானா? என்னண்ணா சொல்றீங்க, ஒண்ணுமே புரியலியே..!

இப்படிக்கு
அப்பாவி